இளம் வழக்கறிஞர் சென்னை அருகே கல்லைப் போட்டுக் கொலை…! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

  • News18
  • Last Updated:
    March 5, 2020, 4:07 PM IST
  • Share this:
நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் சென்னையில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலபாக்கம்- மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் தலையில் காயத்துடன் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

தகவல் அறிந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் அழகு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் நெல்லை மாவட்டம் டவுன் பகுதியைச் சேர்ந்த ராகவ் (26). என்பது தெரியவந்தது.பின்னர், ராகவ் உடலை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெரிய கல்லால் தலையில் அடிக்கப்பட்டு ராகவ் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தின் அருகில் பாதுகாப்பிற்காக பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், அப்பகுதி மக்களிடமும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

வழக்கறிஞராக உள்ள ராகவ்வை கொலை செய்ய காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Also Read: 

நாளை திருமணம்… நள்ளிரவில் மணமகன் படுகொலை

கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகரின் மகன் கைது!


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also See…

[embedded content]


First published: March 5, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/young-advocate-murder-near-chennai-san-263769.html