சென்னை: சீரியஸ் புரியாமல் உயிரை வைத்து விளையாட்டா? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் இப்போதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இப்போதைய நேரத்தில் சமூக தொற்றாக மாறி வருகிறது.

சமூக தொற்றாக இந்த வைரசின் தாக்கம் படி உயரக்கூடாது என்பதற்காக “பிரேக் த செயின்” என்ற ஹேஸ்டேகை உலக நாடுகள் முன்னெடுத்து வழி எதுவும் கிடைக்காமல் சொந்த நாட்டு மக்களை வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளது.

இப்போதைய நிலவரப்படி நாட்டில் 396 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் தமிழ்நாடு மொத்தத்தையும் அரசு முடக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் இன்று காலை 7 மணியளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது அடுத்து வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இவ்வளவு பேரைத்தான் கொரோனா தாக்குமாம்!!

மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைக்குபின் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களும், அதிகாரிகளின் வருகைகளும் அனுமதிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட எல்லையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

நாடே பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் லாக்டவுன் என சொல்லப்பட்டாலும் காலை முதல் இயல்பான சூழலே காணப்படுகிறது. இதற்கிடையே மாநில சுகாதாரத்துறை, வெளிநாடுகள் சென்று ஊர் திரும்பியவர்கள் யாரும் வெளியே உலாவக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

மாநிலம் முழுவதும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் மாவட்ட பேருந்துகள் மக்களின் தேவைக்கு ஏற்ப இடைவெளியில் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலை முன் அறிவித்தபடி வரும் 31 ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அம்மா உணவகத்தில் 3 வேளையும் உணவு கிடைக்கும் என்ற உத்திரவாதத்தை தமிழ்நாடு அரசு முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு எதற்காக? இன்று கொரோனா வராதா? “பொறுப்பில்லாத ஆட்சியாளர்கள்”

சமூக பரவலைத் தடுக்கவே இந்த நடவடிக்கையை மாநில அரசுகள் செய்து வருகிறது. அதே வேளையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கு வகையில் வழி வகை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தினசரி பணியாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பால் வாங்குவது முதல் அனைத்திற்கும் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாநில முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் தூய்மை பணியாளர்கள், மருத்துவர்களுக்குக் கைதட்டி நேற்று பாராட்டுகள் தெரிவித்துள்ள நிலையில் வரி சுமை போன்ற வற்றைத் தளர்த்தவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலக நாடுகள் இந்த சூழலை அவசர நிலையாக அறிவித்து மக்கள் வாழ்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இதே நிலையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-144-current-status-coronavirus-preventive-steps-cm-discussion-announcements/articleshow/74768238.cms