”சென்னையில் இருந்து மலேசியா செல்வதற்காக இந்திய அரசு உதவி செய்ய வேண்டுமென அவர்களின் கோரிக்கையாக வைத்துள்ளனர்”
- Share this:
மலேசியாவை சேர்ந்த 400 பேர் சுற்றுலாவுக்காக கடந்த 12-ம் தேதி சென்னை வந்தனர். சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான மகாபலிபுரம் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் திருச்சி, மதுரை, கோயம்புத்தூரில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு சென்றுவிட்டு கடந்த 20ஆம் தேதி மலேசியாவிற்கு திரும்பி செல்வதற்காக டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.
கடந்த 20 நாட்களாக கொரோனா நோய் பல இடங்களில் பரவி வருவதால் தமிழகத்தில் கொரோனா நோயால் பெருமளவு பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல கட்ட நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளையும் விதித்தது.அதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி ஊருக்கு செல்லும் விமானங்களில் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
இதனால் சென்னையில் விமானங்கள் இல்லாததால் 20-ம் தேதி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கொரோனா நோய் தொடர்ந்து தமிழகத்தில் அதிகளவு பரவி வருவதால் கடந்த 22-ம் தேதியில் இருந்து சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய சர்வதேச விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் 400 பேரும் சென்னை திநகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர்.இன்று மாலையில் 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் போடப்பட்டதால் வெளி ஊர்களில் இருந்து வந்து தி. நகர் ஓட்டலில் தங்கியிருக்கும் அனைவரையும் ஒட்டல் உரிமையாளர்கள் அவர்கள் ஊர்களுக்கு செல்லும் படி கூறியுள்ளார். இதனால் வேறுவழியின்றி அங்கிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து மலேசியா எம்பசியிடம் சென்னையிலிருந்து மலேசியா வருவதற்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை ஏற்று இந்தியாவில் உள்ள தூதரகத்தின் உதவியுடன் தற்போது 400 பேரில் 186 பேர் மட்டுமே மலேசியா செல்ல உள்ளனர். மற்றவர்கள் தாம்பரம் விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tamil Nadu: A special Air Asia flight landed at Chennai Airport today, after evacuating 113 persons including one woman, from Malaysia. All passengers are being shifted to the Indian Air Force facility at Tambaram Air Force Station near Chennai for quarantine. #COVID19 pic.twitter.com/7QtfmuhuMr
— ANI (@ANI) March 23, 2020
மீதமுள்ள 214 பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உண்ண உணவின்றியும் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
மலேசிய மக்களுக்கு சென்னையில் இருந்து மலேசியா செல்வதற்காக இந்திய அரசு உதவி செய்ய வேண்டுமென அவர்களின் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
[embedded content]
First published: March 24, 2020
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-tourists-from-malaysia-lock-to-chennai-airport-vaiju-271237.html