அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாட்டு அறை- சென்னை போலீஸ் – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.  

திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்டவற்றுக்காக செல்ல அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். அவசர பயணத்துக்கான அனுமதி சீட்டு பெற கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களை தர வேண்டும். 

7530001100 இல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ் /வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம். [email protected] என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: https://www.maalaimalar.com/news/district/2020/03/28202613/1373230/Chennai-police-info-Control-room-to-assist-in-emergency.vpf