சென்னையில் 81 பேருக்கு கொரோனா.. எந்தெந்த ஏரியாக்களில் வைரஸ் பாதிப்பு.. முழு விவரம் இதோ.. – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த இடங்களில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்பது குறித்து மாநகராட்சி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

image

8 கி.மீக்கு கன்டெய்ன்மெண்ட் பிளான்… தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல வாரியான கொரோனா பிரேக் அப்பை வெளியிட்டுள்ளது. அதில் எண்ணூர், மணலி, மாதவரம், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம், சாந்தோம், மாம்பலம். போரூர், ஆலந்தூர், கோட்டூர்புரம், திருவான்மியூர், மடிப்பாக்கம், பனையூர் ஆகிய 22 இடங்களில் கொரோனா பாதிப்புடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் அதாவது பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை பகுதிகளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதற்கடுத்து அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசை பகுதியில் 7 பேருக்கு கொரோனா உள்ளது. இந்த பகுதிகளில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என தெரிகிறது.

image கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் 2ஆவது இடத்தில் தமிழகம்.. இதுவரை நடந்தது என்ன?

Source: https://tamil.oneindia.com/news/chennai/zonewise-details-of-corona-patients-in-chennai-381687.html