நடமாடும் விற்பனை நிலையம்: விருப்பமுள்ளோர் அணுகலாம் – சென்னை மாநகராட்சி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
அத்தியாவசிய பொருட்கள்

  • Share this:
காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை தடையின்றி விநியோகம் செய்ய விருப்பம் உள்ள நபர்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனுமதி சீட்டு மற்றும் விற்பனை பதாகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை, காய்கறிகள் உள்ளிட்டவை பொருட்களை வாங்க கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக விநியோகிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.இந்த பணியில் தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபட முன்வரலாம் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை தடையின்றி விநியோகம் செய்ய விருப்பம் உள்ள நபர்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனுமதி சீட்டு மற்றும் விற்பனை பதாகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளோர் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அழைப்பு எண்கள்


First published: April 10, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/private-agencies-or-individuals-can-approach-these-government-announced-numbers-in-chennai-to-distribute-essentials-and-groceries-in-corona-lockdown-vet-mg-276527.html