சென்னையில் எங்கு பாதிப்பு அதிகம்? எந்த வயதினருக்கு அதிகம்..? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் கொரோனா எந்த வயதினரை அதிகம் பாதித்துள்ளது, பாதித்தவர்கள் எங்கெங்கு உள்ளார்கள் என்பது தொடர்பான முழு விபரங்களின் அப்டேட்டை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் 228 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் குணமடைந்து உள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 73 பேரும், திருவிக நகரில் 33 பேரும், கோடம்பாக்கத்தில் 26 பேரும்,  அண்ணாநகரில் 24 பேரும்,  தண்டையார்ப்பேட்டையில் 20 பேரும், தேனாம்பேட்டையில் 19 பேரும் உள்ளனர்.மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர். சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.மண்டலம் – மொத்தம் – உயிரிழந்தவர்கள் – குணமடைந்தவர்கள்:

திருவொற்றியூர் – 5 – 0 – 0

மணலி – 0 – 0 – 0மாதவரம் – 3 – 0 – 0

தண்டையார்பேட்டை – 20 – 1 – 0

ராயபுரம் – 73 – 5 – 1

திருவிக நகர் – 33 – 1 – 0

அம்பத்தூர் – 0 – 0 – 0

அண்ணாநகர் – 24 – 0 – 7

தேனாம்பேட்டை – 19 – 0 – 2

கோடம்பாக்கம் – 26 – 0 – 6

வளசரவாக்கம் – 5 – 0 – 3

ஆலந்தூர் – 3 – 0 – 1

அடையார் – 7 – 0 – 1

பெருங்குடி – 7 – 0 – 2

சோழிங்கநல்லூர் – 2 – 0 – 1

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 67.40% பேரும், பெண்கள் 32.60% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 50 பேருக்கு தொற்று உள்ளது.

குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 2 நபரும், 80 வயதுக்கு மேல் 3 நபரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 19 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 34 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 42 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 41 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 24 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 14 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் உள்ளதா என வீடு வீடாக சோதனை செய்யப்படும் வரும் பணிகள் 95% முடிவுற்று உள்ளன என்றும், இதுவரை 1,99,64,923 பேருக்கு அறிகுறிகள் பரிசோதனை செய்ததில் 643 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். எனவே, சென்னை மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும், வெளியே வரும்போது அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see…

[embedded content]

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-the-corporation-of-chennai-has-provided-the-full-details-of-the-corona-affected-age-group-in-chennai-vin-279161.html