ஊரடங்கில் ஒருவர்கூட பசியோடு இருக்கக்கூடாது – சென்னை மாநகராட்சி – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் வேலையிழந்து, வருமானம் இழந்துள்ள ஏழைகள், சாலை வாசிகள் என உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

வேலை வாய்ப்பு முதல், ஏதாவது விடிவு பிறக்கும் என எத்தனையோ பேர் மாநிலங்கள் தாண்டி சென்னைக்கு வருவது வழக்கம். அப்படி பலபேருடைய பசியை போக்குவதில் சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்படுவதாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், சென்னையில் வீடற்று தவிக்கும் மக்களைக் கவனித்துக்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர பகுதிகளில் மட்டும் 98 நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

முகாம்களில் உள்ளவர்களுக்கு தினசரி அத்தியாவசிய தேவைக்கான பொருட்களும் வழங்கப்படுகின்றன. அதோடு மருத்துவ மற்றும் மனநல பராமரிப்பும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

சென்னை மாநகரில் யாரேனும் வீடற்றவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி பாதுகாத்து வருகிறோம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/no-one-should-be-hungry-on-curfew-days-chennai-corporation/articleshow/75429454.cms