மாதிரிப் படம்
- Share this:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியமாக இயக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
1. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களுக்கு நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.2. வங்கிக் கிளைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
3. மேலும், ATM மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
4. ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகமூடி (Mask) அணிதல், அலுவலகங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் அவ்வப்பொழுது கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்5. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளுக்காக தனியாக பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும், தங்களின் அலுவலகங்கள் குறித்த விவரம், கிருமி நாசினி இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்.
6. அனைத்து அலுவலகங்களும் அவ்வபோது சுகாதாரத் அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும், தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய்ச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
[embedded content]
First published: April 29, 2020
Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/clean-atm-every-time-chennai-corporation-riz-tami-285073.html