சென்னை: தனியார் மற்றும் அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு..! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் மே மாதம் 2ம் தேதிக்குள் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் சாலைகள், தெருக்கள் மிக குறுகியதாக இருப்பதாலே இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிறது என முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் நேற்றும், இன்றும் சென்னையில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி

161 பேர் தமிழகத்தில் இன்று பதிவாகியுள்ள நிலையில் அதில் 138 பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிர படுத்த பொதுவான இடங்கள் தேவைப்படுவதால் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னைக்கு என்னதான் ஆச்சு? இன்று ஒரே நாளில் 138 நபர்களுக்கு கொரோனா..!

பெறப்படும் பள்ளிகளில் மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு கவசங்களை சேர்த்து வைப்பது, மற்றும் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றுவது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-corporation-ordered-to-hand-over-of-govt-and-private-schools-for-corona-precautions/articleshow/75475033.cms