சென்னை அசோக் நகரில் 11 பேருக்கு கரோனா – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் அசோக் நகரைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கச்சென்ற மொத்த வியாபாரியும், அவரிடம் காய்கறி வாங்கியவர்கள் என 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு சந்தையில் இருந்து தஞ்சை சென்ற பழ வியாபாரிக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோன்று சென்னை பெரியமேடு ஷ்ரிங்கர் தெருவில் அடுத்தடுத்துள்ள 5 வீடுகளில் 8 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/may/03/11-corona-cases-in-ashok-nagar-chennai-3411736.html