சென்னையில் விடுவிக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்…! நாளை முக்கிய அறிவிப்பு – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சென்னை மாவட்டம் கொரோனா மையப்புள்ளியாகவே மாறியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் மாநகராட்சியின் கழுகு பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து மாநகராட்சி விடுவிக்கும். அதன்படி, போரூர் சக்திநகர், கோட்டூர்புரம் அம்பாடி தெரு, கள்ளக்குட்டை நேரு தெரு, ஸ்ப்ரிங்டேல் அவென்யூ ஷாந்தி பில்டர்ஸ் பகுதி, பனையூர் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக எந்த புதிய தொற்று பாதிப்பும் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

காவல் துணை ஆணையருக்கு கொரோனா: அதிர்ச்சியில் சென்னை போலீஸ்

ஆகையால் இந்த பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தளர்க்கப்படுகிறது. அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும் மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்ட பகுதிகள் எப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது என்பதை குறித்து சென்னை மாநகராட்சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/no-new-case-reported-in-these-containment-zones-in-the-past-28-days-in-chennai/articleshow/75534140.cms