சென்னை ராயபுரத்தில் 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவாக 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ளது.  தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள்.  இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்து உள்ளது.  சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  ராயபுரத்தில் இன்று வரை 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று, சென்னையில் கொரோனா பாதிப்பு, 5 மண்டலங்களில் 2 ஆயிரம் எண்ணிக்கையை கடந்துள்ளது.  ராயபுரத்திற்கு அடுத்து, தண்டையார்பேட்டை 2,646, தேனாம்பேட்டை 2,374, கோடம்பாக்கம் 2,323, திரு.வி.க. நகர் 2,073 ஆகியவை உள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்பு அண்ணாநகர் (1,864), அடையாறு (1,153) மண்டலங்களில் ஆயிரம் எண்ணிக்கையை கடந்து உள்ளது.  இதேபோன்று வளசரவாக்கம் மண்டலத்தில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 1,043 ஆக அதிகரித்து உள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/06/07123745/3717-people-affected-by-coronation-in-Raipuram-Chennai.vpf