No one is allowed to walking in Chennai he Corporation of Madras || சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை -சென்னை மாநகராட்சி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை என மாநகராட்சி ஆணையர் கூறி உள்ளார்.

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பாக சைதாப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதனை ஆய்வு செய்தபின் 

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:-

 சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் நாள்தோறும், கையுறைகளை வாரந்தோறும் புதிதாக அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில் இ-பாஸ், முறையாக பெறுவது அவசியம் என கேட்டுக்கொண்ட அவர், கைகளால் எழுதி தரும் இ-பாசோ, தனியாரிடம் பெறும் இ-பாசோ செல்லாது என தெளிவுப்படுத்தியுள்ளார். கியூஆர் கோடு இன்றி போலி இ-பாஸ் தருபவர்கள் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை என கூறினார்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/06/26111042/No-one-is-allowed-to-walking-in-Chennai-he-Corporation.vpf