சென்னை போலீசில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு || Chennai police 38 persons were newly affected Corona – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்ஸ்பெக்டர் உள்பட 38 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது. இதையடுத்து சென்னை போலீசில் கொரோனா தொற்று பாதிப்பு 1,129 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணியில் காவலர்கள் கோப்புப்படம்

சென்னை,:

சென்னை போலீசில் 1,091 போலீசார் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 38 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது. இதையடுத்து சென்னை போலீசில் கொரோனா தொற்று பாதிப்பு 1,129 ஆக உயர்ந்தது.

ஒருபுறம் தொற்று பரவினாலும், மறுபுறம் போலீசார் குணம் அடைந்து பணிக்கு திரும்பி வருகிறார்கள். அதன்படி 9 போலீசார் பூரண குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த போலீசாரின் எண்ணிக்கை 444 ஆக அதிகரித்தது.

Related Tags :

Source: https://www.maalaimalar.com/news/district/2020/06/30123649/1660771/Chennai-police-38-persons-were-newly-affected-Corona.vpf