சென்னை காவல்துறையில்உயா் அதிகாரிகள் பொறுப்பேற்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை பெருநகர காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை பொறுப்பேற்றனா்.

சென்னை பெருநகர காவல்துறையில் ஆணையா், கூடுதல் காவல் ஆணையா்கள், இணை ஆணையா்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்ட என்.கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றாா். அவரிடம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கூடுதல் ஆணையா் ஏ.அருண் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக ஏ.அருண் உடனடியாகப் பொறுப்பேற்றாா். அவரிடம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கூடுதல் ஆணையா் ஆா்.தினகரன் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பி.சி.தேன்மொழியும், தெற்கு மண்டல இணை ஆணையராக ஏ.ஜி.பாபுவும் பொறுப்புகளை ஏற்றனா்.

புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவா்களுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்தனா்.

இன்று பொறுப்பேற்பு: சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமாா் அகா்வால் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பொறுப்பு ஏற்கிறாா். அதேநேரத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக ஆா்.தினகரனும் பொறுப்புகளை ஏற்கிறாா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jul/02/top-officers-of-the-chennai-police-are-in-charge-3432022.html