சென்னை: ”பாலியல் தொழில் செய்து வந்தோம்”… பெற்றோருக்கு பயந்து திருநங்கை தற்கொலை… – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை கோடம்பாக்கம் அருகே வள்ளுவர்கோட்டத்தைச் சேர்ந்தவர் சபீனா (19). இவர் தனது தோழியான சிபிகா (19) உட்பட மூன்று திருநங்கைகள் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் கடந்த சில மாதங்களாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

கடந்த 9 ஆம் தேதி அன்று இரவு சபீனா, சிபிகா மற்றும் சில திருநங்கைகள் பாலியல் தொழிலுக்காக வள்ளுவர் கோட்டம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டதும் திருநங்கைகள் அங்கிருந்து தப்பி ஒட்டியுள்ளனர். அதில், சபீனா தனது டூ வீலரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வந்துபார்த்தபோது, டூ வீலரை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சபீனாவும், சிபிகாவும் டூ வீலரை மீட்க நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த போலீசார், காலியில் வந்து டூ வீலரை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இந்நிலையில், வீட்டுக்கு வந்த சபீனா, டூ வீலரை போலீசார் எடுத்து சென்ற விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் அவமானமாக இருக்கும் என அழுதுள்ளார்.

இதையடுத்து அவருக்கு ஆறுதல் கூறிய சிபிகா, ” காலையில் மாமியுடன் சென்று டூ வீலரை எடுத்து வரலாம் என ஆறுதல் கூறினார். எனினும், கலக்கத்தில் இருந்த சபீனா, வீட்டில் மேல் அறைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சபீனா தூங்கி கொண்டிருப்பாள் என நினைத்திருந்த சிபிகா மேலே சென்று பார்த்தபோது, சபினா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியாகி சத்தம் போட்டுள்ளார்.

“இருமலை போட்டு” டாக்டர்களை விரட்டிய கிராம மக்கள்!

இந்த விவகாரகத்தை அடுத்து சிபிகா கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தெரிவிக்கையில், ” சம்பவம் நடந்த அன்று நின்றுகொண்டிருந்த திருநங்கைகள் போலீசாரை கண்டதும் தப்பி ஒட்டியுள்ளனர். அங்கு தனியாக நின்றுகொண்டிருந்த டூ வீலரை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால்தான் சபீனா தற்கொலை செய்துகொண்டார் என சிபிகா புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம்” என கூறினர்.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/transgender-committed-suicide-after-police-took-the-two-wheeler-in-chennai/articleshow/76909726.cms