சென்னை: இ-பாஸ் கிடைக்காமல் தவித்த மனைவி, மகள்! – தனிமையால் தற்கொலை முடிவெடுத்த முதியவர் – Vikatan

சென்னைச் செய்திகள்

அதனால், பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 6 மாதங்கள் சந்திரமோகன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். முதுமை, தனிமை ஆகியவற்றால் மனமுடைந்துள்ளார். மனைவி, மகளிடம் வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். உடனே அவர்கள் பெங்களூருலிருந்து சென்னை வர இ-பாஸுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. மனைவி, மகளைப் பிரிந்த சூழலில் சந்திரமோகன் தறகொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

திருநங்கை தற்கொலை
மாதிரிப் படம்

அதனால், வீட்டின் ஹாலில் மின்விசிறியில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அவரின் மரணம் குறித்து வசந்திதேவியிடம் கூறியபோது கடந்த 9-ம் தேதி என்னிடம் போனில் பேசினார். எதற்காக இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என்று கண்ணீர்மல்க கூறினார்.

சந்திரமோகன், தற்கொலை செய்து சில நாள்களாகியதால் அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. வசந்திதேவி, ஷில்பா ஆகியோர் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/death/chennai-older-man-commits-suicide-due-to-lock-down-issues