சென்னை: `உயிரிழந்த காதல் மனைவியின் முகத்தை பார்க்க விடல!’ – மனமுடைந்த கணவரும் தற்கொலை – Vikatan

சென்னைச் செய்திகள்

மாலை 3.15 மணிக்கு பவித்ரா போன் செய்து எங்களை சாப்பிட்டு விட்டீர்களா என்று போனில் விசாரித்தார். மாலை 4.30 மணியளவில் பவித்ராவைச் சந்திக்க பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கீர்த்தனா என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் கதவை தட்டியும் பவித்ரா திறக்கவில்லை. போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே நான் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவைஉடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். என் மகளின் இறப்பு குறித்துவிசாரித்து சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முகநூல் பதிவு

அரவிந்தராஜன் தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய முகநூலில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில், “நானும் பவியும் ரொம்ப லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கொண்டோம். 15-ம் தேதி என்னை பவியின் முகத்தைப் பார்க்க விடல. என்னால அவள் இல்லாம இருக்க முடியல. அதனால் நானும் அவள்கூட போகிறேன். எங்கள் சாவுக்கு காரணம் பவியின் குடும்பத்தினர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் திருமணம் செய்த பவித்ராவும் அரவிந்தராஜனும் அடுத்தடுத்த தற்கொலை செய்த சம்பவம் பட்டாபிராம், திருநின்றவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/police-investigation-over-chennai-mans-suicide