இந்தச் சம்பவத்தில் மனவருத்தமடைந்த ரூகி, 12-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். ரூகியின் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். அப்போது தரையில் ரத்த வெள்ளத்தில் ரூகி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததைப் பார்த்து, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், ரூகியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரூகி இறந்துவிட்டதாகக் கூறினர். அதைக்கேட்டு ரூகியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்தனர். ரூகியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனனக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `ரூகிக்கும் அவரின் சித்தி மகளுக்கும் மின்விசிறியால் சண்டை ஏற்பட்டுள்ளது என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றனர்.
ரூகியின் இந்த முடிவு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-student-commits-suicide