சென்னை: `ஐ.டி கம்பெனி வேலை டு ஆடு திருட்டு!’ – மனைவியுடன் சிக்கிய கணவர் – Vikatan

சென்னைச் செய்திகள்

அதை ஏற்றுக்கொண்ட கார்த்திக், மனைவியை அழைத்துக் கொண்டு எண்ணூருக்குச் சென்றார். அங்கு தெருவில் ஆடுகள் சுற்றித்திரிந்தன. அதைத் திருடிய கார்த்திக்கும் காவேரியும் குறைந்தவிலைக்கு ஆட்டை விற்றனர். அதனால் இருவருக்கும் பணம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து எண்ணூர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இருவரும் ஆடுகளைத் திருடிவந்தனர்.

ஆடு திருட்டு வழக்கில் சிக்கிய கார்த்திக், காவேரி

போலீஸார், பொதுமக்கள் சந்தேகப்படாமலிருக்க கர்ப்பிணி மனைவி காவேரியையும் கார்த்திக் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்று இந்த ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்துள்ளார். இதுவரை இந்தத் தம்பதி 20 ஆடுகளைத் திருடி தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் விற்று வந்துள்ளனர். ஆடு திருடிய குற்றத்துக்காக கார்த்திக், காவேரியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

கார்த்திக், காவேரி ஆடு திருடும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், ஹெல்மெட் அணிந்திருக்கும் கார்த்திக், தெருவில் படுத்திருக்கும் ஆடு ஒன்றை தூக்கிக் கொண்டு வந்து பைக்கின் முன் பகுதியில் வைக்கிறார். பின்னர் இன்னொரு ஆட்டை அவர் தூக்கிக்கொண்டு வருகிறார். அதுவரை பைக்கிலிருக்கும் ஆட்டை காவேரி பிடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு ஆடுகளை ஒரே நேரத்தில் திருடிக்கொண்டு பைக்கை கார்த்திக் ஸ்டார்ட் செய்வதற்குள் ஒரு ஆடு பைக்கிலிருந்து குதித்து தப்பி ஓடுவதோடு சிசிடிவி முடிவடைகிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-couple-got-arrested-in-goat-theft-case