சென்னை: கொள்ளை புகாரால் வெளிவந்த மனைவியின் சீக்ரெட்! – அதிர்ச்சியில் கணவர் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“இந்தக் கொள்ளை சம்பவத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு, செல்வம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆகாஷ் (19), திருவள்ளூர் மாவட்டம், பள்ளம், புதுநகரைச் சேர்ந்த யுவராஜ் (22), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்கிற வெள்ளை கார்த்திக் (26), குப்புசாமி (25), ஜான் என்கிற ஜான்சன் (25), தோத்து என்கிற வினோத் (25), பிரசாத் (25), அத்திப்பட்டு, புதுநகரைச் சேர்ந்த மணி என்கிற டியோ மணி (22) ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தபோது, எம்.கே.பி நகரைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரகுவுக்கு ராஜேஷின் மனைவி ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராதா அந்தப் பகுதியில் வறுமையில் வாடும் பெண்களை ரகசியமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதற்காக ராதாவின் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு அறை உள்ளது.

பிரசாந்த்

கடந்த வாரம் ராஜேஷின் வீட்டுக்கு வந்த ரகு, அங்கிருந்த ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். ராஜேஷின் மனைவி அவரின் கணவருக்கு தெரியாமல் இந்தத் தொழிலை செய்து வந்துள்ளார். அதனால், ராஜேஷின் வீட்டில் கொள்ளையடிக்க தன்னுடைய கூட்டாளிகளுடன் ரகு திட்டமிட்டுள்ளார். அதன்படி கொள்ளைச் சம்பவத்தில் கூட்டாளிகளுடன் ஈடுபட்டுள்ளார். இந்தக் கொள்ளையில் ஏழரை சவரன் எடையுள்ள தங்க நகைகள், குழந்தையின் வெள்ளிக் கொடி, 50 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசு, 9,000 ரூபாய் மதிப்புள்ள 3 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். அவற்றையும் கொள்ளையடிக்கப் பயன்படுத்தி பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கைதானவர்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகளான இந்தக் கும்பல் ஊரடங்கு நேரத்தில் பணமில்லாததால் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் இன்னும் சிலரை தேடிவருகிறோம்” என்றார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-10-over-red-hills-robbery