லெபனான் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பெரும் வெடிவிபத்து சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக சேமிப்பு கிடங்கில் ஆறு வருடங்களாக வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்ற ரசாயனம் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள துறைமுக நகரங்கள் உஷாராகின. பல்வேறு காரணங்களால் இதேபோன்று அமோனியம் நைட்ரேட் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, விசாகப்பட்டினத்திலும் இவை சேமித்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
2015ஆம் ஆண்டு சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள், மாசு கட்டுப்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆபத்தான இந்த ரசாயணத்தை உடனடியாக இடம் மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுங்கத் துறையிடம் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? – லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
740 டன் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் 697 டன் அமோனியம் நைட்ரேட்டே இருப்பதாகவும் 43 டன் என்ன ஆனது என தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
697 டன் அமோனியம் நைட்ரேட்டை மின்னணு ஏலம் மூலம் ஐதராபாத் நிறுவனம் விலைக்கு வாங்கியது. சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு அந்த நிறுவனம் இதை பயன்படுத்தும். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் 10 கண்டெய்னர் லாரிகள் மூலம் 181 டன் அமோனியம் நைட்ரேட் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இன்னும் அந்த லாரிகள் ஐதராபாத் சென்று சேரவில்லை.
முதல்வரை அவசர ஆலோசனைக்கு அழைத்தார் பிரதமர்: என்ன காரணம்?
பாதுகாப்பு வழிமுறைகள் ஓட்டுநர்கள், பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆலைகள் உள்ள பகுதிகள், அதிக வாகனங்கள் உள்ள பகுதிகளில் லாரிகளை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று 12 கண்டெய்னர் லாரிகளில் தலா 18 டன்கள் என்ற அளவில் இரண்டாம் கட்டமாக 216 டன் அமோனியம் நைட்ரேட் மணலியிலிருந்து இன்று ஐதராபாத் செல்கிறது.
மீதமுள்ள அமோனியம் நைட்ரேட் விரைவில் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://tamil.samayam.com/latest-news/state-news/ammonium-nitrate-goes-to-hyderabad-today-as-the-second-phase-from-chennai-manali/articleshow/77475618.cms