சென்னையில் கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த முடிவு.: சென்னை மாநகராட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பை மேலும் குறைக்க 4 மண்டலங்களில் கூடுதலாக பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் 4 மண்டலங்களிலும் கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=608447