சென்னை நாவலூரை பரபரப்பாக்கிய 15 வயது சிறுமி..! திகில் படங்களை மிஞ்சிய செயல்… – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நாவலூரில் உள்ளது ஹிரானந்தனி அபார்ட்மெண்ட். சுமார் 25 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு சென்னையில் உள்ள பிரபல அபார்ட்மெண்ட்களில் ஒன்றாகும்.

தரை தளத்தில் இருந்து அந்த குடியிருப்பை மேல்நோக்கி பார்த்தாலே சிறிது தலை சுற்றி விடும். இந்நிலையில், அந்த குடியிருப்பின் 23 வது தளத்தில் சுற்றியுள்ள சிறிய விளிம்பில் ஒரு பெண்ணின் உருவம் மூன்று முறை சுற்றி வந்துள்ளது.

அதை பார்த்துக்கொண்டிருந்த எதிர் கட்டட வசிப்பாளர் செல்போனில் படம் எடுத்துள்ளார். மேலும், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஒரு பெண் சாலையில் நடந்து செல்வது போல அத்தனை அடி உயரத்தில் விளிம்பில் நடப்பதை கண்டு அதிர்ந்து போன அவர், அபார்ட்மெண்டில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்த போலீசார் விசாரித்ததில், அந்த விபரீத செயலில் ஈடுபட்டது 15 வயது சிறுமி என்றும், அவருக்கும் சகோதரனுக்கும் ஏற்பட்ட சவாலில் இந்த விபரீதத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிந்தது. இந்நிலையில், போலீசார் சிறுமியின் பெற்றோரை எச்சரித்து சென்றதாக கூறப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/fifteen-years-old-girl-risk-walking-in-the-ledge-of-apartment-in-chennai/articleshow/77481223.cms