சென்னை வந்தாா் தோனி – தினமணி

சென்னைச் செய்திகள்

ஐ.பி.எல். பயிற்சி மேற்கொள்வதற்காக, தோனி உள்ளிட்ட சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்கள் சென்னை வந்தனா்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பா் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா்கள், சென்னையில் சில நாள்களுக்குப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.

முன்னதாக ராஞ்சியில் கரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தாா் தோனி. இதன் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சி.எஸ்.கே. அணித் தலைவா் தோனி உள்ளிட்ட வீரா்கள், விமானம் மூலமாக வெள்ளிக்கிழமை சென்னை வந்தடைந்தனா். ஆகஸ்ட் 15 முதல் 20-ஆம் தேதி வரை, சிஎஸ்கே வீரா்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். பயிற்சிக்குப் பிறகு, வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி, அவா்கள் சென்னையிலிருந்து துபைக்கு புறப்படுகின்றனா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/aug/15/dhoni-came-to-chennai-3450219.html