சென்னை: வேலை செய்த வீட்டில் மேஸ்திரி கொலை! – நள்ளிரவில் பயங்கரம் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னையை அடுத்த ஆவடி வெள்ளனூர் கிராமத்தில் டாக்டர் ஒருவர் வீடு கட்டிவருகிறார். அங்கு திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, சத்தியவேடு சாலை, காந்தி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (49) கொத்தனாராக வேலைப்பார்த்து வந்தார். மேஸ்திரியான இவர், கடந்த ஒருசில மாதங்களாக அங்கேகேய தங்கியிருந்தார். மாரிமுத்துவுடன் கட்டட வேலைக்காக பாட்ஷா பாபு, மோகன், மோகனின் தந்தை ஆகியோர் தங்கியிருந்தனர். இந்தநிலையில் 6-ம் தேதி இரவு 7 மணியளவில் மாரிமுத்து உள்பட அவருடன் தங்கியிருந்தவர்கள் மதுஅருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த சூப்பர்வைஸர் அம்பத்தூரைச் சேர்ந்த அஜிஸ் (29), அனைவருக்கும் சம்பள பணம் கொடுத்துவிட்டு சென்றார்.

கொலை செய்யப்பட்ட மாரிமுத்து

பின்னர் இரவு 10 மணியளவில் மாரிமுத்து, சூப்பர்வைஸர் அஜிஸிக்கு போன் செய்தார். அப்போது என்னுடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று மாரிமுத்து கூறியுள்ளார். உடனே அஜிஸ், பணத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது மாரிமுத்து ரத்தக்காயங்களுடன் இறந்துக்கிடந்தார். அதைப்பார்த்து அஜிஸ் அதிர்ச்சியடைந்தார்.

Source: https://www.vikatan.com/news/crime/man-murdered-in-chennai-construction-site