சென்னை: `45 நிமிடங்கள் தாமதம்; ஒரே நேரத்தில் வந்த 2 ஆம்புலன்ஸ்கள்’ – உயிரைப் பறித்த பேருந்து – Vikatan

சென்னைச் செய்திகள்

அதனால் பஸ் பாஸை புதுப்பிக்க ஆவடி பேருந்து நிலையத்துக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் பஸ்பாஸை புதுப்பித்துக் கொண்டு அவர் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார். ஆவடி பஸ் நிறுத்தத்திலிருந்து 3-வது நிறுத்தமான கோவர்த்தனகிரி பஸ் நிறுத்தத்தில் முருகேசன், இறங்கி சாலையைக் கடக்கும்போதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். முருகேசனுக்கு மங்கையர்க்கரசி 68 என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்” என்றனர்.

ஆம்புலன்ஸ் வர தாமதமானபோது முருகேசனின் கால்களிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அதை எப்படி தடுக்கணும் என்று தெரியாமல் அங்கிருந்த பொதுமக்கள், தங்களுக்குத் தெரிந்த முறைகளை கையாண்டுள்ளனர். ஆம்புலன்ஸ் சீக்கிரமாக வந்திருந்தால் முதியவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர்.

முதுமையிலும் உழைக்க வேண்டும் என்று பஸ்பாஸ் வாங்க வந்தபோது விபத்தில் முதியவர் முருகேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/accident/chennai-elder-man-died-in-road-accident