சென்னை: சிக்னலுக்கு காத்திருந்த பைக்; கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி! – அதிர்ச்சி சம்பவம் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “எண்ணூர் சிவகாமி நகரை சேர்ந்த வர் ராஜேந்திர பிரசாத். இவரின் மனைவி ஆசிரியை மரிய ஒளி நிஷா. இந்தத் தம்பதியின் மகன் பிரனீஷ், மகள் பிரதீஷா. இவர்கள் இருவரும் தங்களது உறவினரான கோபால் மற்றும் உமாவுடன் சென்னை தரமணியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல பைக்கில் இன்று காலை வந்துள்ளனர். அப்பொழுது பட்டினம்பாக்கம் சிக்னலில் கோபால் பைக்கில் காத்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் தண்ணீர்லாரி, கோபாலின் பைக்கின் மீது மோதியுள்ளது.

சக்கரத்தில் சிக்கிய பைக்

அதனால் நிலைத்தடுமாறிய கோபால், பிரதீஷா, உமா ஆகியோர் லாரியின் சக்கரத்துக்கு வெளியில் விழுந்துள்ளனர். ஆனால் பிரனீஷ் மட்டும் லாரியின் சக்கரத்துக்குள் விழுந்து நசுங்கி உயிரிழந்துள்ளார். விபத்துக்குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அடுத்தடுத்து வாகனங்களின் மீது தண்ணீர் லாரி மோதியுள்ளது. அதில் காயமடைந்தவர்களிடமும் விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவர் சமீரைப் பிடித்து அவரிடமும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

சிக்னலுக்காகக் காத்திருந்தபோது தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/accident/in-chennai-4-years-old-boy-died-in-road-accident