சென்னை: போதையில் தகராறு! – கத்தி எடுத்த வியாபாரிக்கு நண்பர்களால் நேர்ந்த சோகம் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நாராயணன், அன்றைய தினம் வியாபாரத்துக்குச் செல்லவில்லை. அதனால் தி.நகர் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில் அமர்ந்து மதுஅருந்தியுள்ளார். அப்போதுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டுவிட்டோம். நாராயண மூர்த்தியுடன் சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த நாகராஜன், காமேஷ், சஞ்சய், பாலாஜி, ரவி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் நாராயண மூர்த்தி நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் நாராயணமூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி உள்ளார்.

கொலை
representational image

இதனால் ஆத்திரமடைந்த ரவி, நாகராஜன், சஞ்சய், பாலாஜி, காமேஷ் ஆகியோர் சேர்ந்து நாராயணமூர்த்தி வைத்திருந்த கத்தியைப் பிடுங்கி அவரை கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி விட்டனர். இந்த வழக்கில் நாகராஜன், பாலாஜி, சஞ்சய், காமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். ரவி என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். நாகராஜன் மீது கொலை வழக்கு உள்ளது” என்றனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு கொலை சம்பவங்கள் சென்னையில் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன், கஞ்சா மோதலில் திருவேற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தி.நகர் பகுதியில் இந்தக் கொலை சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/vendor-murdered-in-chennai-t-nagar