பேரனே போயிட்டான், நெஞ்சுவலி வந்து உயிரைவிட்ட தாத்தா… சென்னை சோகம் – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆகாஷ் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு அதற்காக மனநல ஆலோசனையும் பெற்று வந்துள்ளார். ஆனாலும், கடும் இன்னல்களை சந்தித்து வந்த அவர் நேற்று தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, ராயலா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆக்சின் உடலை தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் உறவினர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இறப்பு செய்தியை அறிந்த உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் என பலர் கண்ணதாசன் நகரில் குவிந்தனர். அப்போது, ஆகாஷின் தாத்தா அங்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதையடுத்து, முதியவர் ஏற்கெனெவே நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

அதே துப்பட்டா… அடுத்தடுத்து தற்கொலை..! கொரோனா விட்டாலும் விடாத பிரச்சினை…

ஆகாஷின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த தாத்தா, பேரனின் இறப்பை தாங்கமுடியாமல் அதிர்ச்சியில் இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். ஒருவரது மரணம் அவரை சார்ந்த மற்றொருவரையும் பாதிக்கும் என்பதை அனைவரும் உணரும் வரை தற்கொலை சம்பவங்கள் தொடரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/grandfather-died-by-cardiac-arrest-after-grandson-commits-suicide-in-chennai/articleshow/78219175.cms