சென்னை: முதல் திருட்டு… பயத்தில் மதுஅருந்திய இன்ஜினீயர் – திருடச் சென்ற வீட்டில் உறக்கம் – Vikatan

சென்னைச் செய்திகள்

உணவு டெலிவரி செய்யச் செல்லும் இடங்களில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்ட முத்தழகன், ஒரு வீட்டில் நள்ளிரவில் திருடலாம் எனத் திட்டமிட்டார். முதல் திருட்டு என்பதால், பயத்தைப் போக்கிக்கொள்ள மதுஅருந்தினார். பின்னர் போதையில் அடையாளம்பட்டு பகுதிக்கு பைக்கில் சென்றார். வீட்டினருகே பைக்கை நிறுத்திவிட்டு, காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றிருக்கிறார். வீட்டின் கதவுப் பூட்டை உடைக்க முடியாததால், முத்தழகன் மாடிப்பகுதிக்குச் சென்றிருக்கிறார். கதவைத் திறந்த பிறகு கொள்ளையடிக்கலாம் எனக் கருதிய முத்தழகன், போதையில் மொட்டைமாடியிலேயே தூங்கிவிட்டார்.

மதுரவாயல் காவல் நிலையம்

கணணயர்ந்து நன்றாகத் தூங்கியிருக்கிறார். காலையில் கண்விழித்த முத்தழகன், வீட்டில் ஆள்நடமாட்டம் இருந்ததால் கீழே சென்றால் மாட்டிக்கொள்வோம் என அங்கேயே பதுங்கியிருந்திருக்கிறார். கொளுத்தும் வெயிலில் சாப்பிடாமல் அங்கேயே பட்டினியாக இருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் வீட்டின் உரிமையாளர் பிளம்பருடன் மொட்டைமாடிக்கு வந்தபோது அவர் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. முத்தழகனை போலீஸார் கைதுசெய்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-engineer-over-theft