சென்னை: மாமனாரைக் காப்பாற்ற உயிரைவிட்ட மருமகள் – வாடகைத் தகராறில் தொடரும் கொலைகள்! – Vikatan

சென்னைச் செய்திகள்

இது குறித்து போலீஸார் கூறுகையில், “நாராயணன், பெயின்ட்டர் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த், ரூபன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனலட்சுமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கிவிட்டு எங்கோ சென்றுவிட்டார். தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. நாராயணன், அவரின் மகன்கள் வீட்டில் இருந்தார். நாராயணன், கடந்த ஆறு மாதங்களாக வாடகைப் பணம் தரவில்லை. மேலும், சந்திரமோகனிடம் நாராயணன் 80,000 ரூபாய் கடனாகவும் வாங்கியிருக்கிறார். சம்பவத்தன்று கடனையும் வாடகைப் பணத்தையும் சந்திரமோகன் கேட்டிருக்கிறார். அப்போது அவரை அவதூறாகப் பேசிய நாராயணன், கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-lady-murdered-over-house-rent-issue