கொரோனா பயம் வேண்டாம்: சென்னை மெட்ரோவில் புதிய வசதி! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னையில் மேலும் பாதிப்பு அதிகரிக்கா வண்ணம் பாதுகாப்பு வழிமுறைகள் கவனமுடன் பின்பற்றப்பட்டு வந்தன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மின்னனு தொழில் நுட்பங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். பெயர் புறக்கணிப்பு

“மின் தூக்கிகளில் கைகளை பயன்படுத்தாமல் காலால் தொட்டு இயக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப சாதனம் சோதனை முயற்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் கடந்த மே மாதம் பொருத்தப்பட்டன.

இது சிறந்த பயனளித்ததை தொடர்ந்து 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து மின் தூக்கிகளிலும் கைகளை பயன்படுத்தாமல் காலால் தொட்டு இயக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப சாதனம் பொறுத்தும் பணி துவங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

காதலர்களின் கூடாரம் மெரினா திறப்பு எப்போது?

மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய கழிப்பறைகளில் சுகாதார நடவடிக்கைகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கழிப்பறைகளில் உள்ள தண்ணீர் குழாய்களை இயக்க கைகளை பயன்படுத்தாமல் காலால் இயக்கும் பொத்தான்கள் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள 190 கழிப்பறைகளில் நிறுவப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை மிக கவனமுடன் உறுதி செய்யும் விதத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த இரண்டு வசதிகளை இந்தியாவிலேயே முதன்முறையாக நிறுவியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/using-lifts-and-toilet-pipes-on-foot-has-been-introduced-in-the-chennai-metro/articleshow/78396398.cms