சென்னை: `பல பெண்களுடன் நெருக்கம்; இரண்டாம் திருமண திட்டம்’ – காவலர் மீது புகாரளித்த மனைவி – Vikatan

சென்னைச் செய்திகள்

மூன்று மாதங்களுக்கு முன் மதுபோதையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரின் செல்போனை எடுத்துப் பார்த்தேன். அதில் சில பெண்களுடன் செல்வக்குமார் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இருந்தன. வாட்ஸ்அப் மெசேஜ்களும் இருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கடந்த ஒருவாரத்துக்கு முன்புதான் செல்வக்குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் எனக்கு கிடைத்தது. அதுகுறித்து கேட்டபோது, அந்தப் பெண்ணையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் எங்களுக்குள் சண்டை வந்தது. அதன்பிறகு செல்வக்குமார் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடைய செல்போன் நம்பரையும் ப்ளாக் செய்துவிட்டார். அதனால்தான் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். என்னைப் போல இன்னொரு பெண், காவலர் செல்வக்குமாரிடம் ஏமாந்துவிடக் கூடாது. தற்போது புகாரை வாபஸ் வாங்கும்படி கூறுகிறார்” என்றார் கண்ணீர்மல்க

காவலர் செல்வக்குமார்

இதுகுறித்து காவலர் செல்வக்குமாரிடம் கேட்டதற்கு “ராதிகாவின் அம்மா, தம்பி ஆகியோர் காவல் நிலையத்துக்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். புகாரை வாபஸ் வாங்கிவிட்டார்கள்” என்றார். உங்கள் மீது ராதிகா எதற்காக புகார் கொடுத்தார்கள் என்று கேட்டதற்கு, ‘அது ஒரு சின்ன பிரச்னை சார்’ என்று கூறிய அவர், ‘விசாரணையில் இருக்கிறேன்’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

காவலர் செல்வக்குமார் மீதான புகாரின் பேரில் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் நட்பில் இருந்த பெண்கள் யாரும் இதுவரை காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை. இந்தப் புகாருக்கு போலீஸார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-woman-complaint-against-her-husband