சிறப்பு மெட்ரோ ரயில் சேவை – சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

நாடு முழுவதும் நாளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வெழுதும் நபர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து, ரயில் வசதிகள் அளிக்கப்படும். அந்த வகையில் சென்னையில் நாளை காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கமாக 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இந்த சூழலில் நாளை (04-10-2020) நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வை எழுதும் நபர்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். ரயில் சேவை நாள் முழுவதும் உச்ச நேரம் (Peak Hours) இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தொற்று காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பயம் வேண்டாம்: சென்னை மெட்ரோவில் புதிய வசதி!

ஆனால் அன்றாடம் அத்தியாவசியப் பணிகளுக்கு அலுவலகம் சென்று வருவோர் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவம், மின்சாரம், பால் விநியோகம் உள்ளிட்ட பணிகளில் இருப்போர் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்.

இதற்காக தாங்கள் அத்தியாவசியப் பணிகளில் இருக்கிறோம் என்று தமிழக அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/cmrl-announced-early-morning-metro-train-service-for-upsc-exam-on-oct-4th/articleshow/78459740.cms