சென்னை: மாணவி கொடுத்த புகார் – போக்ஸோ சட்டத்தில் பேராசிரியர் கைது! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,“பேராசிரியர் லோகேஷுக்கு வேறு ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு நடந்துவருகிறது. இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயம் செய்ய தேதி குறிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான போட்டோவை லோகேஷ் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார். இதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்தார். பிறகு, லோகேஷிடம் மாணவி போனில் பேசியபோது, அவர் பதிலளிக்கவில்லை. அதன்பிறகே லோகேஷ் குறித்த விவரத்தை வீட்டில் மாணவி கூறியுள்ளார். அதன்பேரில் லோகேஷ் மீது காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

கைது
Representational Image

விசாரணைக்குப்பிறகு லோகேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். புகாரளித்த மாணவிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-college-professor-in-pocso