சென்னை: இந்த வருடம் வெள்ளம் உறுதியா… உண்மை நிலவரம் என்ன? – Vikatan

சென்னைச் செய்திகள்

ஐஐடி-யின் வெள்ள அபாய எச்சரிக்கை:

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கார்பன் வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால், 2015-ம் ஆண்டு பெய்த கனமழையைவிட அதி தீவிரமான மழை இந்த ஆண்டு பொழிய வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அதாவது 2015-ம் ஆண்டு பெய்த மழையைவிட 17.37 சதவிகிதம் மழை அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று வகைப்படுத்தி நீர் மேலாண்மையைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள் அவர்கள். ஆனால், இன்று நாம் செய்வது என்ன?

புதிதாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளை உருவாக்கவில்லையென்றாலும் சரி. ஏற்கெனவே இருக்கும் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டடங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். கால்வாய்களைக் கழிவுநீர் கால்வாய்களாக மாற்றிவிட்டோம். ரசாயனக் கழிவுகளைவிட்டு நீர்நிலைகளையும், ஏரிகளையும், ஆறுகளையும் நாசம் செய்துகொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் நீர் நிலைகள்

இதற்குத் தீர்வு, சரியான நீர்நிலை மேலாண்மை மட்டுமே. மழைநீர் வடிகால்களைச் சரியாகக் கட்டி முடித்து அவற்றைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய்களைச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அது நிரம்பியதும் உபரிநீர் அதுவாகவே வடிந்து வெளியேறிவிடும். இவை அனைத்தையுமே நாம் புதிதாகச் செய்யப்போவதில்லை, ஏற்கெனவே செய்திருந்ததை மீண்டும் இன்றைய தொழில்நுட்பங்களைக் கொண்டு செயல்படுத்தப்போகிறோம். இந்த அனைத்தையும் சரியாகப் பின்பற்றினால், சென்னையில் வெள்ளமும் வராது; வறட்சியும் வராது. இது சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் பொருந்தும்.

Source: https://www.vikatan.com/government-and-politics/environment/what-is-the-real-situation-in-chennai-about-flood