சென்னை: ஆடு திருட்டில் ஈடுபட்ட நடிகர்கள்! – `நீதான் ராஜா’ படத்தைத் தயாரித்த பின்னணி – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி. இவருக்குச் சொந்தமாக ஆடுகள் இருக்கின்றன. இவர் வளர்த்துவந்த ஓர் ஆடு, கடந்த அக்டோபர் 9-ம் தேதி திருட்டுப்போனது. இது குறித்து பழனி, மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆட்டைத் தேடிவந்தனர்.

உதவி கமிஷனர் அருள்சந்தோஷமுத்து, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார் ஆடு திருட்டு குறித்து விசாரித்தனர். விசாரணையில் ஆடுகளைத் திருடும் இளைஞர்கள் குறித்த ரகசியத் தகவல்கள் கிடைத்தன.

இது குறித்து மாதவரம் போலீஸார் கூறுகையில் “சென்னைப் புறநகர் பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடப்பட்டுவந்தன. ஆனால், அது தொடர்பாக பலர் காவல் நிலையங்களில் புகாரளிப்பதில்லை. பழனி அளித்த புகாரின் பேரில் மாதவரம், மஞ்சம்பாக்கம், ரிங் ரோடு பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அப்போது சொகுசு காரில் வந்த இளைஞர்கள் இருவர், சாலையில் படுத்துக் கிடந்த ஆட்டைத் தூக்கி, ஒரு காருக்குள் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-actor-and-his-brother