சென்னை: தொடரும் கனமழை… வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! – அப்டேட் நிலவரம் – Vikatan

சென்னைச் செய்திகள்

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு முக்கிய காரணம், நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகளும், மழை நீர் வடிகால்கள் சரியாக இல்லாததும் தான் என்று கூறப்பட்டது. அதையடுத்து, ஆற்றின் இரண்டு கரைகளிலும் இருந்த பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்னை முழுவதும் மழை நீர் வடிகால்கள் கட்டும் பணி தொடங்கியது. 2016 மற்றும் 2017-ம் ஆண்டு அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள், இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அந்த இடங்களில் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. அதோடு, மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியும் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்றுவரை அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் கனமழை
ராகேஷ் பெ

பெரும் மழை பெய்யும் போது, ஊருக்குள் மழைநீரைத் தேங்கவிடாது செய்வதில் மழைநீர் வடிகால்களுக்குத் தான் முக்கிய பங்கு உள்ளது. ஆனால், தற்போது பல இடங்களில் கட்டியும் காட்டாமலும் இருக்கும் வடிகால்கள் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Source: https://www.vikatan.com/government-and-politics/environment/chembarambakkam-lake-filling-in-high-speed-is-chance-for-the-flood-in-chennai