நிவார் புயல்… சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

வங்கக் கடலில் இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு ‘நிவார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னையிலிருந்து 760 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ள நிவார் புயல், மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே புதன்கிழமை பிற்பகலில் கரையை கடக்கும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, “சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும். மிதமாக பெய்ய தொடங்கும் மழை செவ்வாய், புதன்கிழமைகளில் கனமழை மற்றும் மிக கனமழையாக மாற வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் மக்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது? -பட்டியலிடும் அமைச்சர்!

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“புயல் சின்னம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு கடல் அலையின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைன் கிளாஸ்தான்… ஆனாலும் மெஸ் பில் கட்டணும்… தனியார் க்ல்லூரிகள் அடாவடி!

முக்கியமாக, “வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இதுநாள் வரை, சென்னை மாநகரில் 477 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இது சராசரி அளவைவிட 11 சதவீதம் குறைவாகும். எனவே, தற்போது உருவாகிய நிவார் புயலின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில தினங்களுக்கு மழை பெய்யும்; அதேசமயம் புயலால் மாநகருக்கு ஆபத்து இல்லை” என்று கணிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/due-to-nivar-cyclone-heavy-rain-chances-in-chennai-and-suburban-areas-in-next-two-days/articleshow/79362076.cms