- Share this:
[embedded content]
மேலும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அடையாற்றின் ஓரம் இருக்கும் விமான ஓடுபாதைகள் அருகே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 12 மணி முதல் வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் பகுதிகளான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
First published: November 25, 2020
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-cyclone-nivar-people-on-both-sides-of-the-chennai-adyar-are-requested-to-go-to-safer-places-vai-373555.html