சென்னை: கால்வாயில் மீன்பிடித்த சிறுவன் – நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

கால்வாய் ஆழம் மற்றும் அதிகளவில் தண்ணீர் சென்றதால் முகேஷை நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை. அதனால் `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என முகேஷின் நண்பர்கள் கூச்சலிட்டனர். அந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களும் முகேஷைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். மேலும் முகேஷ், தண்ணீருக்குள் விழுந்த தகவலை, அவரின் குடும்பத்தினரிடம் கூறினர்.

சிறுவனைத் தேடும் பணி

இதையடுத்து வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 ரப்பர் படகுகள் மூலம் சிறுவன் முகேஷைத் தேடினர். ஆனால் 2 மணி நேரத்துக்கு மேலாகியும முகேஷைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-9-year-old-drowned-in-canal-water-near-kodungaiyur