சென்னை: போதையில் காரை ஓட்டிய மருத்துவர்; பழிவாங்க ரோந்து வாகனம் கடத்தல்! – போலீஸார் அதிர்ச்சி – Vikatan

சென்னைச் செய்திகள்

பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கெங்கி ரெட்டி சுரங்கப்பாதை வழியாக ரோந்து வாகனம் சென்றபோது அவ்வழியாக வந்த ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஆட்டோவில் பயணித்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதனால் ரோந்து வாகனம் அங்கு நிறுத்தப்பட்டது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் ரோந்து வாகனத்தை மீட்டனர். பின்னர், அதை ஓட்டிச் சென்ற மதுபோதையிலிருந்தவரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீஸார் ஒப்படைத்தனர்.

விபத்து
representational image

போதை தெளிந்த பிறகு அவரிடம் போலீஸார் விசாரித்தபோது அவரின் பெயர் முத்து விக்னேஷ் (31) என்றும் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுவதும் தெரியவந்தது. வார விடுமுறையான ஞாயிற்று கிழமை நண்பர்களுடன் மதுவிருந்தில் பங்கேற்றுவிட்டு வந்த மருத்துவர் முத்துவிக்னேஷை போலீஸார் பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரத்தில் போலீஸாரின் ரோந்து வாகனத்தைக் கடத்திச் சென்று விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து காவலர் சுந்தர், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் மருத்துவர் முத்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மதுபோதையிலிருந்த மருத்துவரின் இந்தச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-doctor-in-drunken-drive