சென்னை: சென்னையில் காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி முதலே மழை பெய்து வருகிறது இது காலை 10 மணி வரை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஜனவரியில் மழை ஏன்?.. அரிதான ஆண்டு 2021.. இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும்.. வெதர்மேன்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இது காலை 10 மணி வரை தொடரும்.
அது போல் வேலூர், ராணிப்பேட்டை, புதுவை, திருவண்ணாமலை, காரைக்காலிலும் மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் பணிக்கு செல்வோர் கடும் அவதிப்படுகிறார்கள். ஆங்காங்கே சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுவையில் பள்ளிகள் நேற்று முதல் திறந்த நிலையில் திடீர் மழையால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-will-get-continuous-rain-upto-10-am-407932.html