சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து தற்போது சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள், மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
Source: https://www.dailythanthi.com/News/State/2021/01/09193832/AIADMK-Consultative-Meeting-at-Chennai-Head-Office.vpf