இதுகுறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் சென்னை அய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ரவிகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது. இருப்பினும் தான் வேலைப்பார்க்கும் கல்லூரியில் பயின்ற மாணவியை ஒருதலையாக காதலித்திருக்கிறார்.
அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளதான் போலி திருமண சான்றிதழை தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. மாணவி, தைரியமாக புகாரளித்ததால்தான் உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது” என்றனர்.
கல்லூரி மாணவிக்கு தொல்லைக் கொடுத்ததோடு போலி திருமண சான்றிதழ் தயாரித்த குற்றச்சாட்டில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-asst-professor-in-student-complaint