பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் : சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் வாகனங்களால்  சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற மக்கள், விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்புவதால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி உள்பட தேசிய  நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடியை கடக்க காத்திருக்கும் ஏராளமான வாகனங்களின் காரணமாக அங்கு நீண்ட வரிசை அணிவகுத்து நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/01/17200049/Heavy-Traffic-in-Toll-gates.vpf