நெல்லை அருகே சென்னை சிறப்பு ெரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

நெல்லை அருகே சென்னை சிறப்பு ரெயிலில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்டு ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

நெல்லை அருகே சென்னை சிறப்பு ரெயிலில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்டு ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

ெரயிலில் திடீர் தீ

நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு ரெயில் நேற்று மாலை நெல்லைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது.

நெல்லை அருகே உள்ள தாழையூத்து ரெயில் நிலையத்தில் இருந்து 4.20 மணி அளவில் கங்கைகொண்டாைன நோக்கி சென்றபோது என்ஜினில் இருந்து 9-வது பெட்டியில் பிரேக் கட்டை உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்தது. அது பிளாஸ்டிக் ஆக இருந்ததால் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பரபரப்பு

இதனை அறிந்ததும் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஊழியர்கள் விரைந்து சென்று ரெயிலில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். சுமார் ½ மணி நேரம் கழித்து 4.50 மணிக்கு ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை சென்ற ரெயிலில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2021/01/17231201/The-Chennai-special-train-caught-fire-near-Nellai.vpf