`குறைபாட்டால் தாம்பத்தியத்தில் நாட்டமில்லை!’ – சென்னை பெண்ணின் புகாரால் அமெரிக்க மாப்பிள்ளை கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

அதை மறைத்து என்னை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள் என கேட்ட போது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் என்னை அடித்து துன்புறுத்தினர். தீபாவளி, பொங்கல் சமயத்தில் தங்கத்தில் கைச்செயின் போடும்படி கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தினர். மேலும் வசந்தன் எனது பெயரில் ஏராளமான கிரெடிட் கார்டுகளை பெற்று அதில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தார். என்னை ஏமாற்றி திருமணம் செய்த கணவர் வசந்தன் உள்பட அவரின் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

புகாரின் பேரில் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தினார். இதில் வசந்தன் உடல் நலக்குறைபாட்டை மறைத்து திருமணம் செய்தது மற்றும் வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தியது உண்மை என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வசந்தன், அவரது தந்தை மோகன், தாய் மோகனகுமாரி உள்பட 4 பேர் மீது 498 (ஏ) வரதட்சணை கொடுமை, 406 (நம்பிக்கை மோசடி) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வசந்தன் அமெரிக்காவில் இருந்ததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து திருவல்லிக்கேணி போலீஸார் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த வசந்தனை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் பிடித்து திருவல்லிக்கேணி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அமெரிக்க இன்ஜினீயர் மீது அவரின் மனைவி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-engineer-on-wife-complaint